Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேலம்: அரசு விழாவில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

செப்டம்பர் 23, 2019 09:25

சேலம்: சேலத்தில் நடந்த ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான பணப்பலன்கள் வழங்கும் விழாவில் ஓய்வுபெற்ற ஊழியர் உயிரிழந்துள்ளார். 

ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பலன் வழங்கும் விழா சேலத்தில் நடந்தது. ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கலந்துகொண்டனர். விழாவுக்காக காலை 8 மணிக்கே அனைவரையும் வரவழைத்து அமர வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் தருமபுரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர் மணியும் ஒருவர்.

அவர் நிகழ்ச்சி நடக்கும்போதே திடீரென தொண்டை எரிகிறது என மயங்கி விழ, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்